ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த அபிஷன் ஜீவிந்த் | காமெடி நடிகராக மாறிய திரிஷ்யம் வில்லன் நடிகர் | வில்லன் நடிகருக்கு ஊக்கமளித்து பதிவிட்ட அவரது பள்ளி ஆசிரியை | 'முத்த மழை' வீடியோ வெளியான பின்பும் சர்ச்சை | நானியின் ‛தி பாரடைஸ்' படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? | நான் வாழ்ந்து வளர்ந்த இடத்தில் விமான விபத்து நடந்தது வேதனை அளிக்கிறது : உன்னி முகுந்தன் | தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் | கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் | குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் |
விஜய் டிவி, பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். சன் டிவியின் 'கேளடி கண்மணி' தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான இவர் தொடர்ந்து 'சுமங்கலி', 'லெட்சுமி வந்தாச்சு' ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இதற்கிடையில், திவ்யா கணேஷூக்கும் பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷூக்கும் நிச்சயதார்த்தம் நடந்து. ஆனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களது திருமணம் நின்றது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த அவர், அந்த மோசமான தருணங்களை மிகவும் கஷ்டப்பட்டு கடந்து வருவதாகவும், தன்னை புரிந்துகொள்ளும் ஒரு பார்டனர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடிய திவ்யா தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்க, திவ்யா கணேஷ் 'மிக விரைவில்' என பதில் அளித்துள்ளார். ஆக மொத்தம் அம்மணிக்கு பார்ட்னர் கிடைச்சாச்சு அது யாரென்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.