இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' | ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர் | சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு |
கலர்ஸ் தமிழ் சேனலில் 'சொல்ல மறந்த கதை' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ரச்சிதா மஹாலெட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். கணவர் இறந்து விட்ட நிலையில், ஒற்றை பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க பாடுபடும் ஒரு தாயின் போராட்டமாக கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதில் ஹீரோவாக யார் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த வந்தனர். தற்போது இதில் பிரபல சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஜய் முன்னதாக 'கனா காணும் காலங்கள்', 'ஆபிஸ்' ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானவர். இருந்தாலும் அமுல் பேபி என்ற பட்டப்பெயருடன் அவர் அதிகமாக பிரபலமானது ஜீ தமிழின் சத்யா சீரியலில் தான். தற்போது சத்யா 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் விஷ்ணு தான் ஹீரோ. ஆனால் அந்த முதல் சீசனை போல் இரண்டாவது சீசன் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் ரச்சிதாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் விஷ்ணு சத்யா 2 சீரியலை கைவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சொல்ல மறந்த கதை வருகிற மார்ச் 7 முதல் இரவு 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.