சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சி 2022ம் ஆண்டினை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புதிய நிகழ்ச்சிகளை துவங்கியதன் மூலமாகவும் விமர்சையாகத் துவங்கியது. இப்போது மார்ச் மாதத்தில் அனைவரையும் கோலாகலத்தில் மூழ்கடிக்க மெகா திருமண வைபவத்தை நிகழத்த ஜீ தமிழ் தயாராகிவிட்டது. இந்த சிறப்பு இரண்டு மணிநேர கல்யாண வைபோகம் ஒரு வாரந்திரத் நிகழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு தொடர்களில் வரும் திருமண எபிசோட்களை மட்டும் சிறப்பு எபிசோடாக ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள். இதற்கு மெகா திருமண வைபவம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
வருகிற 6ம் தேதி முதல், ஞாயிறுதோறும் மதியம் 2 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. முதல் எபிசோடில் 'அன்பே சிவம்' தொடரின் நல்ல சிவம் மற்றும் கவிதா திருமணம் ஒளிபரப்பாகிறது.
13ம் தேதி, ரஜினி தொடரில் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ரஜினி தனது காதலை தியாகம் செய்து, தனது காதலனை தன் தங்கைக்கு விட்டுக்கொடுத்து திருமணம் செய்ய அனுமதிக்கிறாள். அந்த திருமணம் ஒளிபரப்பாகிறது.
பேரன்பு மற்றும் வித்யா நம்பர் 1 தொடரின் ஜோடிகளுக்கு வரும் மார்ச் 20 மற்றும் மார்ச் 27ம் தேதிகளில் முறையே திருமணம் நிகழவுள்ளது.
தொலைக்காட்சி வரலாற்றில் இது ஒரு புதுமையானது என்று சேனல் அறிவித்துள்ளது. இந்த கல்யாண சீசனில் அனைத்து தொடர்களிலிருந்தும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் மனதைத் தொடும் நிறைவான காட்சிகளை இந்த மெகா திருமண வைபவத்தின் மூலமாக ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 2 மணிக்கு, ஜீ தமிழில் மட்டுமே காணவுள்ளோம்.