இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையின் நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர். கடந்த 10 வருடங்களில் தமிழ் சின்னத்திரையில் டாப் சேனல்களில் எல்லாம் நடித்துவிட்டார். தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் குறித்து அண்மையில் அவர் பேசியுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர், 'இதற்கு முன்பு இரண்டு கதைகளை கேட்டிருந்தேன். ஆனால், சொல்ல மறந்த கதையில் ஒரு ஸ்பார்க் இருந்தது. சாதனா கதாபாத்திரத்துடன் என்னால் தனிப்பட்ட முறையில் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் என் வீட்டு உதவியாளர் ஒரு விதவை. குழந்தைகளுக்கான அவரது கடின உழைப்பை நான் பார்த்து வருகிறேன். அவருடன் பேசி புரிந்து கொண்ட பின்பே சாதனா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இன்று சமூக ஊடகங்கள் மக்களின் ரசனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் காதல், மனைவி, கணவர், மாமியார் என சீரியல்களை எடுக்க முடியாது. அவர்கள் சிறந்த கதைகளை விரும்புகிறார்கள். எனவே, தொலைக்காட்சியில் நல்ல கதைகளை கொண்டு வருவது முக்கியம்' என கூறியுள்ளார்.