தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'சேது'. விக்ரமுக்கு அடுத்தபடியாக அந்த படத்தில் அனைவரும் புகழ்ந்த கதாபாத்திர தேர்வு 'அபிதா' தான். உண்மையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க தேர்வாகி இருந்தவர் பிரபல வில்லி நடிகை ஷில்பா தான். ஆனால், பாலா போட்ட கண்டிஷனால் ஹீரோயின் வாய்ப்பை தவற விட்டு விட்டார்.
இதுகுறித்து ஷில்பா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், 'பாலா சார் ஆடிசனுக்கு தாவணி கட்டிட்டு வர சொன்னார். ஆடிசன் முடிந்தது பத்து நாள் கழித்து நீங்கள் படத்தில் நடிக்கிறீர்கள். படம் முடிய ஒரு வருடம் கூட ஆகலாம். ஆனால், அதுவரை நீங்கள் சீரியலில் நடிக்க கூடாது என்றார். எனக்கு அப்போது சீரியலில் அதிக வாய்ப்புகள் வந்தன. பல தொடர்களில் நடித்தேன். எனவே, சேது படத்தை மிஸ் பண்ணிவிட்டேன். ஆனால், இப்போதும் அது குறித்து எனக்கு கவலை எதுவும் இல்லை. ஏனெனில் சீரியலில் நான் பல வெரைட்டியான கேரக்டரில் தொடர்ந்து நடித்தேன்' என்று கூறியுள்ளார்.
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும், ஷில்பா சீரியல்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இன்றளவும் தமிழ் சின்னத்திரையில் டாப் வில்லி நடிகைகளில் ஷில்பாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.