அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் கொரோனா காலக்கட்டத்தில் முடித்து வைக்கப்பட்டது. எனினும், மக்களிடம் கிடைத்த வரவேற்பால் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் சில காலங்கள் மொக்கையாக சென்ற திரைக்கதையால் இந்த தொடர் கைவிடப்படும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், முத்துராசாவின் கொலை, முத்துராசுவின் ரீ எண்ட்ரி, செந்திலின் டபுள் ஆக்சன் என மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த தொடர் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை நிறைவு செய்ய உள்ளதால் சீரியல் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் சேர்த்து மொத்தமாக 1000 எபிசோடுகளை தொடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.