குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வருபவர் வீஜே அர்ச்சனா. பாரதி கண்ணம்மாவின் வெண்பா கதாபாத்திரத்திற்கு பின் சின்னத்திரையில் அதிகம் பேசப்படும் வில்லியாக பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், விஜய் டிவி விருது விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வீஜே அர்ச்சனாவின் தாயார், 'என் மகளை எல்லோரும் திட்டுறாங்க. பரீனாவுக்கு கூட கல்யாணம் ஆகி குழந்த இருக்கு. என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாம் நடக்கனும். சீரியலில் வில்லி என்பது வெறும் நடிப்பு தான். வெளியில் அவர்களை பார்க்கும் போது வெறுப்பு காட்டாதீங்க. உங்களுக்காக தான் அவங்க நடிக்கிறாங்க' என உருக்கமாக பேசியுள்ளார்.
சீரியலில் வில்லி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலத்தை தருமோ, அதேவேளையில் சில ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும். அந்த வகையில் அர்ச்சனாவும் சில நெகட்டிவான கமெண்ட்டுகளை சின்னத்திரை ரசிகர்களிடமிருந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.