ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் சுஜா வருணி. இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார். தற்போது தனது மகன் அத்வைத்திற்காக சில புத்தகங்களை வாங்கியுள்ள சுஜா வருணி அதிலிருந்து ஆத்திச்சூடி புத்தகத்தை முதலில் எடுத்து தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். அதன்பின் தமிழ் கடவுளான முருகனை அறிமுகம் செய்கிறார்.
இதன் வீடியோவை பகிர்ந்துள்ள சுஜா வருணி, 'என்னங்க? தமிழ் சொல்லிக்கொடுக்கிறேன் பாக்குறீங்களா. தமிழ் தாங்க முதல்ல. இங்கிலீஸ் அப்புறம் மத்த மொழிகள குழந்தைங்க ஸ்கூலுக்கு போய் படிச்சிப்பாங்க. ஆனா, நாம நம்ம தாய் மொழிய விட்டுக் கொடுக்கவே கூடாது' என கூறியுள்ளார். இப்படி அருமையான செயலை செய்துள்ள சுஜா வருணியை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.