'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் சுஜா வருணி. இவருக்கும் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார். தற்போது தனது மகன் அத்வைத்திற்காக சில புத்தகங்களை வாங்கியுள்ள சுஜா வருணி அதிலிருந்து ஆத்திச்சூடி புத்தகத்தை முதலில் எடுத்து தமிழ் சொல்லிக் கொடுக்கிறார். அதன்பின் தமிழ் கடவுளான முருகனை அறிமுகம் செய்கிறார்.
இதன் வீடியோவை பகிர்ந்துள்ள சுஜா வருணி, 'என்னங்க? தமிழ் சொல்லிக்கொடுக்கிறேன் பாக்குறீங்களா. தமிழ் தாங்க முதல்ல. இங்கிலீஸ் அப்புறம் மத்த மொழிகள குழந்தைங்க ஸ்கூலுக்கு போய் படிச்சிப்பாங்க. ஆனா, நாம நம்ம தாய் மொழிய விட்டுக் கொடுக்கவே கூடாது' என கூறியுள்ளார். இப்படி அருமையான செயலை செய்துள்ள சுஜா வருணியை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.