ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கோபியாக நடித்து கலக்கி வருபவர் நடிகர் சதீஷ் குமார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியில் சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே சதீஷ் குமாரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதோடு, பாராட்டுகளையும் பெற்று வருகிறார். வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட ஒரு ஹீரோவுக்கு இணையாக தான் ரசிகர்கள் இவரை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தனது பழைய புகைப்படத்துடன் நகைச்சுவையான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ச்சே... ஹீரோன்னு நினைச்சோம். வில்லன் ஆக்கி விருது குடுத்துட்டாங்க. வில்லனுக்கு ரெண்டு ஹீரோயின். எந்த கதையில இப்படி வருது. அப்போ நான் நல்லவனா? கெட்டவனா?. இல்ல நீ வல்லவன்' என பதிவிட்டு அதை தனது கதாபாத்திரமான கோபியின் மைண்ட் வாய்ஸ் என குறிப்பிட்டுள்ளார். இதைபார்க்கும் ரசிகர்களோ 'உங்களுக்கு சிறந்த நடிகர்' பிரிவில் விருது வழங்கியிருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.