தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் 'யாரடி நீ மோகினி'. இதில் ஹீரோவாக ஸ்ரீகுமாரும், வில்லியாக சைத்ரா ரெட்டியும் அசத்தியிருந்தனர். அதிலும் சைத்ரா ரெட்டியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்களின் பெருத்த ஆதரவுக்கு மத்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்த தொடர் சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவுற்றது. இந்நிலையில் சைத்ரா ரெட்டியும், ஸ்ரீகுமாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைபார்த்துவிட்டு இருவரும் புது சீரியலில் நடிக்கிறார்களா? அல்லது யாரடி நீ மோகினி சீசன் 2 வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் எந்த புதிய சீரியலிலும் சேர்ந்து நடிக்கவில்லை. யாரடி நீ மோகினி முடிவுற்ற பின் சைத்ரா ரெட்டி 'கயல்' தொடரிலும், ஸ்ரீகுமார் 'வானத்தைப் போல' தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களுமே ஒரே டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள். எனவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து கொண்ட இருவரும் நட்பின் அடிப்படையில் செல்பி எடுத்துக் கொண்டு பகிர்ந்துள்ளனர்.