சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி |
சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறது ஜீ தமிழ். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரண்டு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளது.
மதியம் நேரம் ஒளிபரப்பாகி வந்த 'என்றென்றும் புன்னகை' தொடர் நாளை சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடரில் நக்ஷத்திரா, கவிதா, விஷ்ணுகாந்த், நிதின் ஐயர், சுஷ்மா நாயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' தொடரும் வருகிற 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆஷா கௌடா, நந்த கோபால் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.
ஹிட் தொடர்கள் இரண்டும் அடுத்தடுத்த முடிவுக்கு வரவுள்ள நிலையில், இவற்றின் வெற்றிடத்தை புது சீரியல்கள் நிரப்புமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுத்துள்ளது.