தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத், பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அனிதா சம்பத் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அனிதா சம்பத், ‛வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா.பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு. இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும், நிறைய உழைப்பும், நிறைய மெனக்கெடல்களும் கடந்து சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம். நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும். இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.' என பதிவிட்டுள்ளார்.