தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த தொடரின் சீசன் 2 கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஒளிபரப்பாக ஆரம்பமானது. சீசன் 2வில் செந்தில், ரக்ஷிதா, ராஜூ என பலரும் நடித்து வந்தனர். இந்நிலையில், திடீரென ரக்ஷிதாவும், அதன்பின் பிக்பாஸூக்காக ராஜூவும் சீரியலை விட்டு வெளியேறினர். இதனால், டிஆர்பியில் இந்த சீரியல் ஆட்டம் கண்டது.
இதனையடுத்து பலமுறை இந்த தொடர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனாலும், மோனிஷா, பவித்ரா என வரிசையாக நடிகைகளை இறக்கி ஓரளவு ஓட்டி வந்தனர். சமீபத்தில் சரண்யாவின் திருமணத்தை வைத்து கூட சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எனவே, இந்த தொடர் தற்போதைக்கு முடிவுக்கு வராது என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், கடைசி நாள் ஷூட்டிங்கை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.