தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 13ம் தேதி முதல் கண்ட நாள் முதல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும். தர்ஷனா, நவின், அருண், ரஷ்மிதா ரோஜா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இத்தொடர் நந்தினி ( தர்ஷனா) வாழ்வில் குறுக்கிடும் குமரனின் (நவீன்) வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது. விதியின் திருப்பத்தால், ஒருவருக்கு ஒருவர் மனக்கசப்புகள் இருந்தாலும் குமரன் நந்தினியை திருமணம் செய்து கொள்கிறான். இந்தநிலையில் குமரனுக்கும் நந்தினிக்கும் இடையே காதல் மலர்கிறதா அல்லது அவர்கள் ஒருவரையொருவர் இகழ்வது தொடர்கிறதா என்பது ஒரு புறம்.
இன்னொரு புறம் குமரனின் தங்கை அர்ச்சனா (ரஷ்மிதா) தன் சகோதரன் திருமணம் செய்த குடும்பத்திலேயே தானும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக பணக்கார தொழில் அதிபரின் மகன் நகுலனை (அருண்) திருமணம் செய்து கொள்கிறாள். இந்த சிக்கல்கள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் கதை.
இது குறித்து நடிகர் நவின் கூறியிருப்பதாவது: இதயத்தை திருடாதே சீரியலைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கலர்ஸ் தமிழ் உடன் இணைவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இந்த சீரியலை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் தனித்துவமான கதைக்களமும், கதாபாத்திரமும்தான். முதன்முறையாக நான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன், குமரன் என்ற கதாபாத்திரமாக மாற கடுமையாக உழைக்க வேண்டியது இருந்தது. நாங்கள் அனவரும் கடும் முயற்சி செய்து சிறப்பாக நடித்திருக்கிறோம். என்கிறார் நவீன்.