இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் ராஷ்மி ஜெயராஜ். தொடர்ந்து ராஜபார்வை சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த ராஷ்மி, அந்த சீரியல் முடிந்த பின் ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு சீரியலில் மீண்டும் நடிக்காத ராஷ்மி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஷ்மிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து கொண்ட ராஷ்மி ஜெயராஜ், அன்றைய தினத்தில் தனது கணவருக்காக சிறப்பு தந்தையர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ராஷ்மிக்கு அவரது குழந்தைக்கும் பலரும் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.