இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல சீரியல்களில் நடித்து வருபவர் ஸ்ரீநிதி. வலிமை படத்திற்கு விமர்சனம் செய்ததால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை திட்டித்தீர்த்தனர். அதன்பிறகு அடிக்கடி பல சர்ச்சையான கருத்துகளை கூறி வந்த ஸ்ரீநிதி நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி, சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்தி சர்ச்சைகளை கிளப்பினார். அதுமட்டுமில்லாமல் நடிகை நக்ஷத்திராவின் காதலரால் நக்ஷத்திராவிற்கு ஆபத்து என்று கூறியும், சித்ராவை நினைவுப்படுத்தியும் பேசியிருந்தது சமூக ஊடங்கங்களில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நக்ஷத்திராவும் அவரது காதலரும் தனித்தனியே விளக்கமளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஸ்ரீநிதியின் அம்மாவும் அவளது நடவடிக்கை சரியில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள சிகிச்சை மையத்தில் ஸ்ரீநிதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. புழல் பகுதியில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் ஸ்ரீநிதிக்கு கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.