வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஹிந்தியில் 'பவால்', 'சிச்சோரே' ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது 'ராமாயணா' எனும் படத்தை இயக்கி வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடிக்கின்றனர். அதேபோல், அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்தில் சீதாவாக நடிப்பதற்கான ஆடிஷனில் முதலில் 'கேஜிஎப்' படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி பங்கேற்றிருந்தார். ஆனால், ஆடிஷனில் அவர் தேர்வாகவில்லை; அவருக்கு பதிலாக சாய் பல்லவி சீதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு நழுவிய வாய்ப்பு குறித்து ஸ்ரீநிதி ஷெட்டி கூறியதாவது: ராமாயணா படத்தில் சீதா வேடத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றிருந்தேன். 3 காட்சிகளை நடித்துக்காட்ட சொன்னார்கள். என் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது.
அடுத்த ஓரிரு மாதங்களில் கேஜிஎப் படம் வெளியானது. அதில் யஷ் ஜோடியாக நடித்திருந்த நிலையில், ராமாயணா படத்தில் யஷ் ராவணனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ராவணனாக யஷூம், சீதாவாக நானும் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்காக படக்குழுவினர் எனக்கு வாய்ப்பளிக்காமல் விட்டிருக்கலாம். அதன்பிறகு, சீதாவாக சாய் பல்லவி தேர்வானதாக கூறப்பட்டது. அந்த கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி நல்ல சாய்ஸ் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.