இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று சினிமாவில் கால் பதிக்க போராடிக்கொண்டிருப்பவர் நடிகர் ப்ரஜின். இவர் தனது சக தோழியான சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாண்ட்ராவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சில காலங்கள் நடித்துவந்தார். அதன்பின் அவர் பெரிதாக திரையில் தோன்றவில்லை. இந்த க்யூட்டான ஜோடிக்கு மித்ரா, ருத்ரா என அழகான இரட்டை குழந்தைகளும் உள்ளது.
இந்நிலையில் பல நாட்களாக சாண்ட்ராவை யாரும் திரையிலோ, சோஷியல் மீடியாக்களிலோ பார்க்காத நிலையில் அவரது புகைப்படத்தை ப்ரஜின் பகிர்ந்துள்ளார். அதில், 'இரட்டை குழந்தைகளின் அம்மா காபியுடன் ரிலாக் செய்து கொண்டிருக்கிறார்' என கேப்ஷனும் போட்டுள்ளார். சாண்ட்ராவின் புகைப்படத்தை நீண்ட நாட்கள் கழித்து பார்த்த வீஜே தியா மேனனும் 'நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி சேச்சி' என கமெண்ட் அடித்துள்ளார். அதுபோல் ரசிகர்கள் பலரும் சாண்ட்ராவை நலம் விசாரித்து வருகின்றனர்.