இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அசோக் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள பெஸ்டி திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தின் புரோமோஷன் விழாவில் ஹீரோ அசோக் குமார், ஹீரோயின் யாஷிகாவுடன் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். சமீபகாலமாக படத்திற்கு ரிவியூ சொல்கிறேன் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை உளறி காமெடி செய்து டிரெண்டாகி வரும் நடிகர் கூல் சுரேஷூம் அந்த விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'வெந்து தணிந்தது காடு, யாஷிகா ஆனந்துக்கு வணக்கத்தை போடு' என தனது ஸ்டைலில் பஞ்ச் டயலாக்கை எடுத்துவிட்டார். தொடர்ந்து பேசிய கூல், சுரேஷ், 'படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்தேன். அதுவே வயாகரா சாப்பிட்டது போல் இருக்கிறது. இந்த படத்தை முதல்நாளே பார்க்க வேண்டும். இளைஞர்கள் கண்டிப்பாக வர வேண்டும்' என கூறியுள்ளார். பேட்டியின் போது யாஷிகாவின் கைகளை பிடித்து தடவிய படி அவர் ஜொள்ளுவிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து பலரும் கூல் சுரேஷை ஏடாகூடமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.