இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா, ராஜா ராணி 2 சீசனில் இருந்து விலகினார். தற்போது அவருக்கு குழந்தை பிறந்து 4 மாதம் ஆகிவிட்டது. எனவே, அவரின் ரீ என்ட்ரியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், சோஷியல் மீடியாக்கள் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடி வரும் ஆல்யா - சஞ்சீவ் தம்பதியினர் ஆல்யாவின் கம்பேக் எப்போது என்ற ரசிகர்களின் கேள்விக்கு யூ-டியூப் சேனலில் பதிலளித்துள்ளனர்.
அந்த வீடியோவில் ரசிகர்களின் கேள்விகளை சஞ்சீவ் ஆல்யாவிடம் கேட்க அதற்கு ஆல்யா பதிலளிக்கிறார். அப்போது 'பழைய ஆல்யாவ எப்போது பாக்கலாம்? எப்பதான் கம்பேக் கொடுப்பீங்க?' என்று கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'ஷூட்டிங் போனா ஒழுங்க டயட் இருக்கனும். ஆன் டைம்ல தூங்கி எந்திரிக்கனும். அதனால, கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணிட்டு, நல்ல சாப்பிட்டு ஆரோக்கியமாகனும். அப்புறம் வொர்க்-அவுட் செஞ்சு ட்ரிம் ஆனதுக்கு அப்புறம் ஷூட்டிங் போகலாம்' என கூறியுள்ளார். ஆல்யாவின் இந்த பதிலால் அவர் கட்டாயம் கம்பேக் கொடுக்க போகிறார் என ரசிகர்களுக்கு உறுதியாக தெரிந்துவிட்டது. எனவே, இந்த முறையும் 6 மாதத்திற்கு பிறகு ஆல்யா புதிய சீரியலில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.