ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆர்ஜே வைஷ்ணவி சின்னத்திரையில் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமானார். அஞ்சான் என்பவரை காதலித்து வந்த வைஷ்ணவி, கடந்த 2019ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், வைஷ்ணவி அஞ்சானை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆறு வருடமாக அஞ்சானுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து, நாங்கள் இருவரும் இப்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன் ஆனாலும், உறவின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் எங்களை நாங்களே இழக்காமல் இருக்க வேண்டுமென தீர ஆலோசனை செய்துவிட்டு அதன்பின்னர் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். எங்களுக்குள் பல பொதுவான மற்றும் பகிர்ந்துகொண்ட விருப்பங்கள் அனைத்தும் நாங்கள் ஒரு நல்ல நண்பர்களாக இருப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை இப்போது புரிந்துகொண்டோம். எங்களுக்குள் எந்தவித மனக்கசப்பும் இல்லை. தேவையில்லாமல் எதையும் யூகித்து பரப்ப வேண்டாம்.' என அதில் தெரிவித்துள்ளார்.