தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மினி 'ஆனந்தம்' படம் போல பல குடும்ப ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து வருகிறது. இதில், கதாநாயகர்களின் அம்மாவாக லெஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இந்த லெட்சுமி கதாபாத்திரம் இறப்பது போல் காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், உண்மையான இறுதிச்சடங்கு நடப்பது போலவே ஷூட் செய்யப்பட்டு சரவண விக்ரமுக்கு உண்மையாகவே முட்டையடிக்கப்பட்டது. அவரும் நடிப்பில் தூக்கலாக பெர்மான்ஸ் செய்ய அந்த எபிசோடு சூப்பர் ஹிட்டாகி டிஆர்பியிலும் எகிறியது. ஆனால், கதைப்படி லெஷ்மி கதாபாத்திரம் இறந்துவிட்டாலும் நடிகை ஷீலா இன்னும் சீரியலை விட்டு முழுமையாக விலகவில்லை. அடிக்கடி ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், முதன்மை நாயகி சுஜிதாவுடன், ஷீலா நிற்பது போன்ற புதிய புகைப்படம் தற்போது வைரலாகி ஷீலா ரீ-என்ட்ரி என்கிற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. குடும்பத்து உறுப்பினர்களுடன் கனவிலோ, பளாஷ்பேக் சீனிலோ லெஷ்மி அம்மாள் வந்து பேசுவது போல் அடிக்கடி காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஷீலா தற்போது எந்த கனவிற்காக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது தெரியவில்லை. இந்த ரீ-என்ட்ரி பதிவுகளை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் 'இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்ல இருந்திருக்கலாம்' என லெஷ்மி அம்மாவை இறந்ததாக காட்டியதை கிண்டலடித்து கலாய்த்து வருகின்றனர்.