ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் புகழ் பெற்றவர் ரவிச்சந்திரன் . பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழில் தயாராகும் வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய கேரக்டர்தான் என்றாலும் விஜய் படம் என்பதால் மிகுந்த நம்பிக்கையோடு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருக்கிறார்.
நடிக்க வேண்டிய அன்று படப்பிடிப்புக்காக காத்திருந்தபோது இவரை பார்த்த இயக்குனர் வம்சி. இவர் நான் நினைத்திருக்கும் கேரக்டருக்கு பொருந்த மாட்டார். கொஞ்சம் ரிச்சாக தெரிகிறார். இவரை ஏழையாக நடிக்க வைக்க முடியாது, வேறு நடிகரை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து விஜய்யை சந்தித்து முறையிட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கு படக்குழுவினர் அனுமதிக்கவில்லை. அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். என்றாலும் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போன ஏமாற்றத்தை நண்பர்களிடம் வேதனையோடு பகிர்ந்து வருகிறாராம் ரவிச்சந்திரன்.