வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 அண்மையில் முடிவுக்கு வந்தது. பிரபலங்களுக்கிடையே நடைபெற்ற கடுமையான போட்டியில் ரசிகர்களின் பேவரைட் ஜோடிகளான அமீர் - பாவ்னி மற்றும் சுஜா வருணி - சிவா என இருவருமே வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். பரிசுத்தொகையான 5 லட்சம் 2 ஜோடிகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது சுஜா வருணி - சிவா ஜோடிக்கு ஏற்பட்ட துயரமான சம்பவம் பற்றிய தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சுஜா வருணி கர்ப்பமாக இருந்துள்ளார். எனினும், மருத்துவரின் அறிவுரையின் படி தொடர்ந்து நிகழ்ச்சியில் நடனமாடியிருக்கிறார். ஆனால், ஒருநாள் நிகழ்ச்சியின் அவருக்கு உடல்சுகவீனம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுஜா வருணியின் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், ஜோடிகள் இருவரும் சோகத்தில் மூழ்கினர். இருப்பினும் முழு உழைப்பை செலுத்தி அந்த துன்பத்தில் இருந்து வெளிவந்ததாகவும், அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த டைட்டில் வின்னர் பட்டம் என சுஜா வருணி - சிவா தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களது வெற்றியை பலர் பாராட்டி வந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கும் போது இப்படி ரிஸ்க் எடுத்ததே தவறு என விமர்சித்தும் வருகிறார்கள்.