தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிது புதிதாக பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி விதவிதமான கதைக்களத்தில் தொடர்ந்து புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ‛‛அமுதாவும் அன்னலட்சுமியும், மாரி மற்றும் மீனாட்சி பொண்ணுங்க'' உள்ளிட்ட சீரியல்களை அறிமுகம் செய்தது. தற்போது அந்த சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில்கனா மற்றும் இந்திரா என இரண்டு புத்தம் புதிய சீரியல்களை இன்று(நவ., 21) மதியம் முதல் துவங்கி உள்ளது.
ஆண்களுக்கு பெண்கள் ஒன்றும் சளைத்தவர்கள் கிடையாது என துணிச்சலான பெண்ணாக ஐஏஎஸ் கனவை நோக்கி பயணிக்கும் பெண்ணின் கதையாக இந்திரா சீரியல் உருவாகி உள்ளது. திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இதில் பௌஷி நாயகியாக நடிக்க அக்ஷய் கமல் நாயகனாக நடிக்கிறார். ப்ரேமி வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அம்மா மற்றும் தாய் மாமாவுடன் வாழ்ந்து வரும் அன்பரசி கட்டாய திருமணத்தில் இருந்து தப்பித்து தனது கனவான தடகளத்துறையில் சாதித்தாளா? என்பது தான் கனா சீரியல் கதைக்களம். திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலில் நாயகியாக லட்சுமி பிரியா நடிக்க, விஷ்ணு நாயகனாக நடிக்கிறார். இன்னும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
உங்கள் இல்லம் தேடி வரும் கனா மற்றும் இந்திரா என்ற இரு புத்தம் புதிய சீரியல்களை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.