சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
'சந்திரலேகா' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார் நடிகை ஸ்வேதா பண்டேகர். சுமார் 8 வருடங்களாக ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே மிக நீண்ட சீரியல் என்கிற சாதனையை படைத்திருந்தது. இந்த சீரியலானது சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றது.
இந்நிலையில், அவர் தனது அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான கதை பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மாறாக, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது காதல் கதையை அப்டேட்டாக கொடுத்துள்ளார் ஸ்வேதா.
ஸ்வேதா தனது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு 'என் இதயம் நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போனது. அதை இப்போது கண்டுபிடித்துவிட்டேன்' என பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் ஸ்வேதாவின் காதலர் பின்னால் திரும்பிய படி நிற்கிறார். எனவே, அவரை யார் என்று தெரிந்து கொள்ள முடியாத ரசிகர்கள் ஆர்வமிகுதியால் ஸ்வேதாவிடம் அவர் யார்? எப்போ ரிவீல் பண்ணுவீங்க? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.