படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்சன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ராம், ஆயிஷா, ஜனனி, அசீம், கதிர், ஏடிகே ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிப்பார். ஆனால், இந்த வாரம் சனிக்கிழமையன்றே எலிமினேட் செய்யப்படும் அந்த இரண்டு நபர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ராம் மற்றும் ஆயிஷா தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ராமின் எவிக்சனை கூட மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் ஆரம்பம் முதலே ராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், ஆயிஷா சமீபத்திய எபிசோடுகளில் நன்றாக தான் விளையாடினார். மேலும், ஜனனி போன்ற ஆயிஷாவையும் விட குறைவான பெர்பாமன்ஸ் உள்ள நபர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். எனவே, இது உண்மையில் மக்களின் தீர்ப்பல்ல. பிக்பாஸின் தன்னிச்சையான முடிவு என பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.