திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளில் காமெடிகளில் அசத்தி வருபவர் நாஞ்சில் விஜயன். டிவி சீரியல்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கடந்த 2020ல் நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்த விவகாரத்தில் நடந்த விவாதத்தில் சூர்யா தேவி குறித்து அவதூறாக நாஞ்சில் விஜயன் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இவர்களுக்குள் மோதல் இருந்துள்ளது. இதில் தன்னையும், தனது நண்பர்களையும் தாக்கியதாக நாஞ்சில் மீது போலீசில புகார் அளித்துள்ளார் சூர்யாதேவி. இதுதொடர்பாக நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகும் படி நாஞ்சிலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று(டிச., 17) நடிகர் விஜயனை போலீசார் கைது செய்தனர்.