தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்துவுடன் சண்டை போட்டதன் காரணமாக மக்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்தார் தனலெட்சுமி. இருப்பினும் அடுத்தடுத்த வாரங்களில் தன்னை திருத்திக் கொண்டு நன்றாக விளையாடி வந்தார். கடந்த வார எலிமினேஷனில் தனலெட்சுமி யாரும் எதிர்பாரத வகையில் வெளியேற்றப்பட்டதால் பிக்பாஸ் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். நாமினேஷனில் இடம்பெற்ற கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே சேப் கேம் விளையாடி தப்பித்து வந்ததால் அவர்களில் யாராவது ஒருவர் தான் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முற்றிலும் மாறாக நன்றாக விளையாடி வந்த தனலெட்சுமி வெளியேற்றப்பட்டதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தனலெட்சுமிக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். சேவ் தனா ஹேஷ்டேக்கும் டிரெண்ட்டானது. இருப்பினும் இறுதியில் தனலெட்சுமி எலிமினேட் செய்யப்பட்டதால் பிக்பாஸ் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், தப்பான கேம் பற்றி பேசும் கமல்ஹாசனே இப்படி தப்பான எலிமினேஷனை செய்யலாமா? என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.