சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக நடித்து மிகவும் புகழ் பெற்றவர் வீஜே அர்ச்சனா. சிறந்த வில்லிக்கான சிறப்பு விருதையும் தட்டிச் சென்ற அவர், திடீரென சீரியலை விட்டு விலகினார். வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை சந்திப்பேன் எனவும் அப்போது தெரிவித்திருந்தார். அவர் சினிமாவில் நடிக்க இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகிவிட்டார் என செய்திகள் பரவியது. ஆனாலும், அர்ச்சனா என்ன செய்கிறார் என்பது குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. அவ்வப்போது போட்டோஷூட் மட்டுமே நடத்தி வந்தார். நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில் தான் அவர் நடிப்பில் 'தம்மா துண்டு' என்ற ஆல்பம் பாடல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த அர்ச்சனா தற்போது அருள்நிதி நடிக்கும் டிமாண்டி காலனி 2 படத்தில் அருள்நிதியின் தங்கையாக நடிக்க கமிட்டாகி உள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'அவள் என்னவள்' என்கிற வலைதொடரும் விரைவில் வெளியாகவுள்ளது. இவ்வாறாக இந்த புத்தாண்டின் தொடக்கமே அர்ச்சனாவுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ள நிலையில், அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.