தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியில் கடந்த 2011-ல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி. இதில் சரவணனாக மிர்ச்சி செந்தில்குமாரும், மீனாட்சியாக கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜா சந்திரனும் நடித்தனர். கிட்டத்தட்ட 500 எபிசோடுகள் வரை ஜோடியாக நடித்தவர்கள் அந்த சமயத்தில் காதல் வசப்பட்டு 2014ல் திருமணமும் செய்து கொண்டனர். கடந்த 4ஆம் தேதி கேரளாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஸ்ரீஜா.
திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள மிர்ச்சி செந்தில் தங்களுக்கு பிறந்த குழந்தை மூலம் தாங்களும் அப்பா அம்மாவாக புதிதாக பிறந்திருக்கிறோம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.