தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா சிறிய இடைவெளிக்கு பின் 'இனியா' என்ற சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆல்யாவின் ரசிகர்களும் அவரது கம்பேக்கை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்ததாகவும், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதன்பின் மறுநாளே ஷூட்டிங் செல்வதாக பதிவிட்டிருந்தார்.
தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் நோயாளிகள் உடுப்பில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'அறுவை சிகிச்சைக்கு ரெடியாகிவிட்டேன். கொஞ்சம் பயமா இருக்கு' என்று பதிவிட்டுள்ளார். மேலும், கணவர் சஞ்சீவை பற்றி பெருமையாக கூறி 'சஞ்சீவ் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆல்யாவின் இந்த பதிவானது வைரலாகி வரும் நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேசமயம், ஆல்யாவுக்கு அறுவை சிகிச்சை என்பதால் ஷூட்டிங்கில் அவர் தொடர்ந்து நடிப்பாரா? இல்லை 'இனியா' தொடரிலிருந்து விலகிவிடுவாரா? எனவும் சிலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.