50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எலிமினேட் ஆன ஹவுஸ்மேட்டுகள் உட்பட பல பிரபலங்கள் என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை புரொமோட் செய்து வருகின்றனர். இந்த வார எவிக்சனில் ஏடிகே வெளியேறியுள்ளார். இந்நிலையில், போட்டியின் இறுதிக்கட்டத்தில் நடக்கும் பணப்பெட்டி டாஸ்க்கானது அண்மையில் நடைபெற்றது. பைனலிஸ்ட் 6 பேரில் கதிர் மட்டும் பணம் மூட்டையை அறுக்க, மற்ற போட்டியாளர்கள் காத்திருக்கும்படி கேட்டனர்.
அப்போது கதிர் நான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என கூறி பணமூட்டையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். கதிர் வீட்டிலிருந்து வெளியேறும் முடிவால் சோகத்தில் ஆழ்ந்த ஷிவினிடம், போட்டிக்காக வாழ்த்து கூறி கை குலுக்க முயன்றார் கதிர். ஆனால், ஷிவின் கைகொடுக்க மறுத்து கைகூப்பி கதிருக்கு விடைகொடுத்தார். கதிர் சிரித்தப்படியே அங்கிருந்து சென்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதளங்களில் வைரலாக பலரும் ஷிவினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.