இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தென்னிந்திய மொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த ராதிகா ப்ரீத்தி, 'பூவே உனக்காக' தொடரின் மூலம் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இளைஞர்களின் மனதை கவர்ந்த இந்த பேரழகி சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்தனர். ராதிகாவோ இனி சினிமாவில் மட்டுமே இனி கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் புதிதாக நடித்து வரும் ப்ராஜெக்ட் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ராதிகா ப்ரீத்தி புதிதாக படமொன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த படத்திற்காக டப்பிங் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், 'புதிய படம், புதிய தொடக்கம்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ராதிகா ப்ரீத்தியின் வெற்றிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.