ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வீஜே மகேஸ்வரி விவாகரத்துக்கு பின் கணவரை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரை, சினிமாக்களில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வரும் மகேஸ்வரி அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6லும் பங்கேற்று விளையாடினார். பிக்பாஸ் 6 முடிவுக்கு வந்த நிலையில் அசீமின் வெற்றி குறித்து விமர்சித்திருந்த அவர் தொடர்ந்து விக்ரமனுடனும் நட்பாக பழகி வருகிறார். அசீமின் வெற்றியை விமர்சிப்பதால் கடுப்பான அவரது ஆதரவாளர்கள் மகேஸ்வரி குறித்தும் அவருடைய மகன் குறித்தும் தரக்குறைவான கருத்துகளை சோஷியல் மீடியாவில் பேசி வந்தனர்.
இந்நிலையில் இதற்கு ரியாக்ட் செய்துள்ள மகேஸ்வரி தனது டுவிட்டரில், 'ஒரு போராளியாக இருக்கிறாய் மகனே நன்றி!. நச்சு ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகத்தை நீ பெண்களுக்கான சிறந்த உலகமாய் மாற்றுவாய் என நம்புகிறேன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். அம்மா உன்னை பாதுகாப்பேன்' என பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் 'புகார் பதிவு செய்யப்பட்டுவிட்டது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் குறிப்பிட்டுள்ளார். மகேஸ்வரியின் விமர்சனத்திற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்திருக்கக் கூடாது என்று அசீமின் ஆதரவாளர்களை பலரும் தற்போது கண்டித்து வருகின்றனர்.