தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

குக்வித் கோமாளி சீசன் 4ல் இம்முறை புதிய கோமாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஒருவராக சோஷியல் மீடியாக்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட ஓட்டேரி சிவாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓட்டேரி சிவா முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பிறகு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைகர் கார்டன் தங்கதுரை என்ட்ரி கொடுத்துள்ளார். இதற்கு காரணமாக ஓட்டேரி சிவா குடித்துவிட்டு வருவதும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது செயல்கள் நாகரீகமாக இல்லை என்றும் செய்திகள் பரவின. இதனையடுத்து இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள ஓட்டேரி சிவா, 'நான் குடிக்கமாட்டேன். அவர்கள் சொல்வது பொய். சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்புடுவேன். நான் பிரபலமாகி அதிகம் சம்பாரிக்கிறேன் என்ற பொறாமையில் சிலர் அப்படி கூறுகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து என்னை நீக்கவில்லை. விரைவில் கூப்புடுகிறோம் என்று கூறியுள்ளனர்' என்றார். மேலும், தனது ரசிகர்கள் தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும்படியும் வேண்டுகோள் வைத்துள்ளார்.