இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல திரைப்பட நடிகையான வினோதினி ப்ரீலேன்சர் வேலையை கூட ப்ரீயாக செய்யாதீர்கள் என அறிவுரை செய்துள்ளார். அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில், 'நடிப்பதற்கோ, எழுதுவதற்கோ, கண்டண்ட் கிரியேட் செய்வதற்கோ, நேர்காணலுக்கோ, ஆசிரியர் பணிக்கோ, சிறப்பு விருந்தினராகவோ என எந்த வேலைக்கு என்னை அழைப்பதாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு இவ்வளவு பணம் தருவோம் என்று பேச ஆரம்பியுங்கள். என்னை வைத்து நீங்கள் ஏதோ ஒருவகையில் பணம் சம்பாதிப்பதாக இருந்தால் அதில் எனக்கும் பங்கு வேண்டும். லாப நோக்கில் அல்லாமல் லட்சிய ஆர்வத்திற்காக நீங்கள் ஒரு செயலை செய்வதாக இருந்தால் அதில் நான் இலவசமாக செய்து உங்கள் லட்சயத்தில் பங்கெடுத்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும், அந்த பதிவில் சில நடிகர்கள் நேர்காணல் கொடுக்க கூட பணம் வாங்குகிறார்கள் அப்படியென்றால் நான் மட்டும் என்ன முட்டாளா? என்றும் நக்கலாக கேட்டுள்ளார்.