வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பிரபல திரைப்பட நடிகையான வினோதினி ப்ரீலேன்சர் வேலையை கூட ப்ரீயாக செய்யாதீர்கள் என அறிவுரை செய்துள்ளார். அவர் அண்மையில் வெளியிட்டுள்ள பதிவில், 'நடிப்பதற்கோ, எழுதுவதற்கோ, கண்டண்ட் கிரியேட் செய்வதற்கோ, நேர்காணலுக்கோ, ஆசிரியர் பணிக்கோ, சிறப்பு விருந்தினராகவோ என எந்த வேலைக்கு என்னை அழைப்பதாக இருந்தாலும் நாங்கள் உங்களுக்கு இவ்வளவு பணம் தருவோம் என்று பேச ஆரம்பியுங்கள். என்னை வைத்து நீங்கள் ஏதோ ஒருவகையில் பணம் சம்பாதிப்பதாக இருந்தால் அதில் எனக்கும் பங்கு வேண்டும். லாப நோக்கில் அல்லாமல் லட்சிய ஆர்வத்திற்காக நீங்கள் ஒரு செயலை செய்வதாக இருந்தால் அதில் நான் இலவசமாக செய்து உங்கள் லட்சயத்தில் பங்கெடுத்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். மேலும், அந்த பதிவில் சில நடிகர்கள் நேர்காணல் கொடுக்க கூட பணம் வாங்குகிறார்கள் அப்படியென்றால் நான் மட்டும் என்ன முட்டாளா? என்றும் நக்கலாக கேட்டுள்ளார்.