இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் |
நமது சமுதாய கட்டமைப்பில் மிகவும் நலிவுற்ற நிலையில் இருப்பது துப்புரவு தொழிலாளர்களின் சமூகம் தான். அவர்களின் அருமை கொரோனா காலக்கட்டத்தில் தான் அனைத்து மக்களுக்கும் புரிந்தது. அதுமுதலே பிரபலங்களில் சிலர், துப்புர தொழிலாளர்களின் வாழ்வியலையும், கஷ்டங்களையும், தியாகங்களையும் ஏதோ ஒருவகையில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சி பிரபலமான திவ்யா கிருஷ்ணன் துப்புரவு தொழில் செய்யும் பெண்ணை தனதருகில் அழைத்து அவரை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் செயலை செய்து வரும் அவர், இந்நிகழ்வுக்கு தகுந்தாற் போல் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறளை பதிவிட்டுள்ளார். இதன்மூலம் செய்கின்ற தொழிலால் வேற்றுமை பார்க்கக்கூடாது மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். திவ்யா கிருஷ்ணனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.