தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் குமரன் தங்கராஜன். சினிமாவிலிருந்து சீரியலுக்கு நடிக்க வந்த இவருக்கு மீண்டும் சினிமா வட்டாரத்தில் நுழையும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அண்மையில் ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வதந்தி வெப்சீரிஸில் குமரன் தங்கராஜன் நடித்திருந்தார். அதில் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, மாயாதோட்டா என்ற புதிய வெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பும் குமரனுக்கு கிடைத்தது. ஹிந்தி ஓடிடியான ஹங்காமா ப்ளேயில் இந்த தொடர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வரிசையாக வெப்சீரியஸில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் குமரன் இனி பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது.
இதற்கு பதிலளித்துள்ள குமரன், 'பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வதந்தி, மாயத்தோட்டா வெப் சீரிஸ்களில் நடித்து முடித்துவிட்டேன். ஆனால், இனிவரும் காலங்களில் திரைப்படங்கள், வெப்சீரிஸ்களில் நடிக்கும் போது கால்ஷீட் கொடுக்க நேரம் இல்லாமல் போனால் கண்டிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிடுவேன்' என்று கூறியுள்ளார்.
மாயத்தோட்டாவுக்கு பிறகு குமரன் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. எனவே, இன்னும் சில நாட்கள் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நீடிப்பார் என ரசிகர்கள் திருப்தியடைந்துள்ளனர்.
--