இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடிக்கடி நடிகர்கள் மாரி வருகின்றனர். இதுவரை 5 கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் மாறிவிட்டனர். அதிலும் இரண்டு ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டும் 5 முறை நடிகைகள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தொடர் குடும்பங்களுக்கு பிடித்த தொடராக தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நீண்டநாட்களாக நடித்து வந்த சாய் காயத்ரி தற்போது சீரியலை விட்டு விலகியுள்ளார். ஏற்கனவே, இந்த கதாபாத்திரத்தில் முதலில் வைஷாலியும் அதன்பின் வீஜே தீபிகாவும் நடித்து வந்தனர். இதில் தீபிகாவின் முகத்தில் சரும பிரச்னை அதிகம் இருந்ததால் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தான் சாய் காயத்ரி நடித்து வந்தார். தற்போது சாய் காயத்ரி விலகிவிட்ட நிலையில் வீஜே தீபிகா மீண்டும் சரவணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் தீபிகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.