ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகர் தர்ஷன் தமிழில் ரஜினி முருகன், கனா, தும்பா, துணிவு ஆகிய படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானர். தர்ஷனுக்கு ஏராளமான பெண் ரசிகைகளும் உள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தர்ஷன் என நினைத்து சோஷியல் மீடியா போலி ஐடியில் ஒருவருடன் பேசி வந்துள்ளார். அவர்களின் நட்பு படிப்படியாக வளர்ந்து வாட்ஸ்அப் வரை சென்றுள்ளது.
தர்ஷன் தான் என நினைத்த அந்த பெண் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். ஆனால், அதன்பிறகு அந்த பெண்ணின் புகைப்படங்களை மார்ப் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனக் கூறி 2லட்சம் ரூபாய் பணம் கேட்டு மோசடிக்காரன் மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அந்த பெண்ணும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து மிரட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரனையை தொடங்கிய போலீசார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன், வாகித் என்பவர்கள் தான் அந்த போலி ஐடியை உருவாக்கியதை கண்டுபிடித்துள்ளனர். சகோதரர்களான இவர்கள், அந்த போலி ஐடியின் மூலம் அந்த பெண்ணிடம் மாறி மாறி பேசி பணம் மோசடி செய்துள்ளனர் என்பதும் விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.