ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் 1 எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கும் முன் மணிமேகலை திடீரென இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து மற்றொரு காமெடி நட்சத்திரமான குரேஷியும் சீசன் 4லிருந்து விலகுவதாக செய்திகள் வெளியானது.
இது உண்மைதானா என ரசிகர்கள் தவித்து வந்த வேளையில் குரேஷியும் தனது டுவிட்டர் பக்கத்தில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த நினைவுகளுக்கு நன்றி' என சொல்லி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதை சூசகமாக சொல்வது போல் டுவீட் போட்டிருந்தார். இதனால், அவர் உண்மையிலேயே விலகிவிட்டார் என சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இதனையடுத்து அந்த டுவீட்டை குரேஷி தற்போது நீக்கிவிட்டு, 'உடல் மண்ணுக்கு உயிர் குக் வித் கோமாளிக்கு' என புதிதாக டுவீட் போட்டுள்ளார். இதனால், அவர் உண்மையிலேயே நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டாரா? இல்லையா என்பது புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.