தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் மிக சில காட்சிகளிலே வந்திருந்தாலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த கதாபாத்திரங்களில் ஒன்று தான் குதிரைக்கார சிறுவன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நடித்த காளி என்ற சிறுவன் அசல் கிராமத்து சிறுவனாக தனுஷுக்கு தெனாவெட்டாக பதில் சொல்லும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் அடியை தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறிவிழுந்து கர்ணனை கூப்பிட செல்லும்போதும் தத்ரூபமாக நடித்திருப்பார்.
கர்ணன் படத்தில் நடித்ததற்காக சிறுவன் காளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதன்பிறகு ஊடக வெளிச்சத்தில் பெரிதாக தலைக்காட்டாத காளியை ஒருவர் பேட்டி எடுத்துள்ளார். அதில், கர்ணன் படத்தில் வாங்கிய சம்பள பணம் முழுவதையும் தனது சகோதரி மகளின் சடங்கிற்கு செலவழித்துவிட்டதாகவும், தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அந்த பேட்டியானது சோஷியல் மீடியாவில் பரவ, சிறுவன் காளிக்கு நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டும் எனவும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனவும் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.