ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வருகிறார். பிரியங்காவுக்கு முன்னதாக ராகுல் வர்மா என்ற தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அதன்பின் அந்த திருமணம் நின்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், பலருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் பிரியங்காவும், ராகுல் வர்மாவும் திடீரென கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்புகைப்படங்களை பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இந்த திருமணத்தில் இருவரது பெற்றோர்களோ, நண்பர்களோ கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தான் பிரியங்காவின் சகோதரியின் திருமணம் கோலகலமாக நடந்தது. அதேபோல் பிரியங்காவின் திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெறும் என பலரும் நினைத்திருந்த வேளையில், பிரியங்காவும் ராகுலும் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளனர்.