2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
கன்னட சின்னத்திரை நடிகையான மதுமிதா தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பேவரைட்டான நடிகையாக மாறியுள்ளார். முன்னதாக கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏற்கனவே சீரியல்கள் நடித்திருந்தாலும் மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் சீரியலின் ஜனனி கதாபாத்திரம் தனியொரு இடத்தை பெற்று தந்துள்ளது. நன்றாக தமிழ் பேச கற்றுக்கொண்டுள்ள மதுமிதா அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், 'முன்னதாக நடித்த சீரியல்களில் ஓவர் ஆக்ட் செய்வேன். அது அந்த சீரியல்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் எதிர்நீச்சல் தொடர் நிஜவாழ்க்கையுடன் கனக்ட் ஆகிறது. மற்ற சீரியல்களை போல் அல்லாமல் எதிர்நீச்சல் தொடரில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஈஸ்வரி, நந்தினி கதாபாத்திரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். குறிப்பாக மாரிமுத்து அனைவர் வீட்டிலும் இருக்கிறார். மாரிமுத்துவை அடிக்க வேண்டும் என என்னிடமே சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவரிடத்திலும் ரீச்சாகியுள்ளது. இந்த தொடரில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. 10 வருடம் இந்த சீரியல் தொடர்ந்தால் கூட கண்டிப்பாக நடிப்பேன். இங்கேயே செட்டிலாகிவிடுவேன்' என்று கூறியுள்ளார்.