ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

சின்னத்திரை நடிகையான அனு சில சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களில் நடிப்பில் மிரட்டி வந்தார். கடைசியாக பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வந்த போது அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அண்மையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த அனு, பிரசவ வேதனையின் போது தனது கணவர் உறுதுணையாய் தன்னுடன் இருந்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
தற்போது தன் மகனுக்கு தூய தமிழில் ‛வான் வியன்' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், தன் மகனுக்காக அழகான கவிதை எழுதியும், ரசிகர்களிடம் ஆசி கேட்டும் அவர் செய்துள்ள செயல் பலரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சீரியலில் வில்லியாக இருந்தாலும் நிஜத்தில் அழகிய தமிழ் மகள் என பலரையும் உருக செய்துள்ள அனுவையும், அவரது மகன் வான் வியனையும் வாழ்வாங்கு வாழ வேண்டுமென பலரும் வாழ்த்தி வருகின்றனர்.