இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட நடிகை ஷகீலாவை சக மனுஷியாக பார்க்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா கனிவான இதயமும் கொண்டவர் என்பதை புரிந்து கொண்ட பலரும் அவருக்கு ரசிகர்களாகிவிட்டனர். சில யூ-டியூப் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வரும் ஷகீலா, சில சமூக பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். அவர் அண்மையில் தனது ஏரியாவில் நடந்த பிரச்னைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார்.
தனது ஏரியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் குடும்பமாக வசித்து வருபவர்களுக்கு ரூ.2500, பேச்சிலர்ஸ்களுக்கு ரூ.9000 என பராமரிப்பு செலவாக வசூலித்து வந்தனர். அந்த தொகை செலுத்தப்படாத காரணத்தால் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கு தண்ணீர் இணைப்பை துண்டித்துள்ளனர். இதன்காரணமாக அந்த குடியிருப்பில் வசித்து வந்த பேச்சிலர்ஸ் உட்பட பலரும் வீதியில் போராடியுள்ளனர். இதுகுறித்து அறிந்த ஷகீலா இரவு நடந்து அந்த போரட்டத்தில் பேச்சிலர்ஸ்க்கு ஆதரவாக களமிறங்கி போரடியுள்ளார். தனக்கு சற்றும் தொடர்பில்லாத விவகாரத்தில் தன்னலமற்று மக்களுக்காக போரடிய ஷகீலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.