சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட நடிகை ஷகீலாவை சக மனுஷியாக பார்க்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா கனிவான இதயமும் கொண்டவர் என்பதை புரிந்து கொண்ட பலரும் அவருக்கு ரசிகர்களாகிவிட்டனர். சில யூ-டியூப் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வரும் ஷகீலா, சில சமூக பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். அவர் அண்மையில் தனது ஏரியாவில் நடந்த பிரச்னைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார்.
தனது ஏரியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் குடும்பமாக வசித்து வருபவர்களுக்கு ரூ.2500, பேச்சிலர்ஸ்களுக்கு ரூ.9000 என பராமரிப்பு செலவாக வசூலித்து வந்தனர். அந்த தொகை செலுத்தப்படாத காரணத்தால் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கு தண்ணீர் இணைப்பை துண்டித்துள்ளனர். இதன்காரணமாக அந்த குடியிருப்பில் வசித்து வந்த பேச்சிலர்ஸ் உட்பட பலரும் வீதியில் போராடியுள்ளனர். இதுகுறித்து அறிந்த ஷகீலா இரவு நடந்து அந்த போரட்டத்தில் பேச்சிலர்ஸ்க்கு ஆதரவாக களமிறங்கி போரடியுள்ளார். தனக்கு சற்றும் தொடர்பில்லாத விவகாரத்தில் தன்னலமற்று மக்களுக்காக போரடிய ஷகீலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.