தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மருத்துவர் ஷர்மிளா காலப்போக்கில் சின்னத்திரை சீரியல்களிலும் படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்து நடிகையாக பிரபலமானார். சமீபகாலங்களில் அரசியல், சமூகம், பெண்ணியம் சார்ந்த கருத்துகளை பொதுவெளியில் பேசி வருகிறார். இந்நிலையில், கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து அண்மையில் பேட்டி அளித்துள்ள ஷர்மிளா, கல்லூரிக்கும் பேராசிரியருக்கும் ஆதரவாக பேசிவரும் பிக்பாஸ் அபிராமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
'கலாஷேத்ரா என்ற பெயர் கூட வாயில் நுழையாதவர்கள் அதை பற்றி குற்றம் சொல்கின்றனர்' என அபிராமி பேசியிருந்ததை சுட்டிக்காட்டிய ஷர்மிளா, இதன் மூலம் கலாஷேத்ரா ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமானது. இதில் கேள்வி கேட்க மற்றவர்கள் யார்? என்பது போல் அபிராமி பேசியிருக்கிறார். அபிராமியின் இந்த பேச்சு அவரது ஆணவத்தை தான் காட்டுகிறது. மத்திய அரசு தரும் நிதியில் தான் கலாஷேத்ரா செயல்படுகிறது. எனவே, கேள்வி கேட்க்ககூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு கொடுமை நடக்கலாமா? நம் சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கு தான் குரல் கொடுக்கிறோம் என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என ஷர்மிளா கூறியுள்ளார்.