தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே கிழக்கு வாசல் தொடர் உருவாகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், ராதிகா, ரேஷ்மா, அஸ்வினி, சஞ்சீவ் வெங்கட், அருண்குமார் ராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் நடிக்க கமிட்டாகியிருந்தனர். நடிகர் சஞ்சீவ் வெங்க்ட தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். சீரியலுக்கான ஷூட்டிங்கும் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் கிழக்கு வாசல் தொடரிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'நான் கிழக்கு வாசல் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக விலகிவிட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். கிழக்கு வாசல் தொடரில் முத்து கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராதிகா சரத்குமார் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை மிஸ் செய்கிறேன். அடுத்த ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன் நன்றி' என்று அறிவித்திருந்தார். இதனால், சஞ்சீவின் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.