தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா தொடரில் காமெடி ரோலில் நடித்திருந்தார் சந்திரன். தற்போது மலர் தொடரில் நடித்து வருகிறார். அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையால் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த சந்திரன் ரூ.35 லட்சத்தை இழந்துள்ளார். முதலில் வைஷ்ணவி தான் 25 ஆயிரம் ரூபாயை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதற்கு ஒழுங்காக பணம் வரவே கடன் வாங்கி ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார். அவரைப்போலவே சந்திரனும் தனது வீட்டை அடமானம் வைத்து ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அதற்கு அடுத்தமாதமே பணம் வருவது நின்றுவிட்டது. கடந்த செப்டம்பரில் தான் சந்திரனுக்கும் வைஷ்ணவிக்கும் திருமணம் நடந்தது. தற்போது இந்த பிரச்னையால் சொந்த வீட்டிலிருந்த சந்திரன் வாடகை வீட்டிற்கு வந்துவிட்டதாகவும், வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார்.